ஆசியா

சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா!

சீனா சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது.

இது வரும் காலத்தில் மின்சார தேவையை இலகுவாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஈஸ்ட் எனப்படும் எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் எனப்படும் இதை ஆய்வாளர்கள் ‘செயற்கை சூரியன்’ என்றும் கூட அழைக்கிறார்கள்.

இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா சுமார் 1,000 வினாடிகள் நீடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2023ல் சீன ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வை நடத்திய போது பிளாஸ்மா 403 வினாடிகள் இருந்த நிலையில், இப்போது அதை முறியடித்து சுமார் 1000 நொடிகள் பிளாஸ்மா நீடித்துள்ளது.

நியூக்ளியர் ஃப்யூஷன் போது ஏற்படும் பிளாஸ்மாவில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் (10 கோடி செல்சியஸ்) வெப்பநிலை ஏற்படும்.

இருப்பினும், அந்த வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைப்பது சவாலாகவே இருந்து வந்தது. அதைத் தான் இப்போது சீன ஆய்வாளர்கள் தக்கவைத்துள்ளனர். சுமார் 1000 நொடிகள் இந்த வெப்பத்தைத் தக்கவைத்துள்ளது ஒரு மாபெரும் சாதனை என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!