ஆசியா

திபெத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!

சீனாவின் திபெத்தில் உள்ள ஷிகாஸ்டே நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீன மத்திய அரசு வழங்கிய முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளன.

குறித்த பகுதிகளுக்கு நேற்று (07) இரவு நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் மற்றும் தேசிய உணவு மற்றும் சேமிப்பு நிர்வாகத்தால் தொடர்புடைய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதில் ஏறக்குறைய 6,000 கூடாரங்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் உடைகள் உள்ளடங்கியதுடன் மேலும் 16,000 நிவாரணப் பொருட்கள் இன்று (08) அந்தப் பகுதிகளை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிலநடுக்கத்தால் தடைபட்ட அனைத்து வீதிகளும் மீட்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

(Visited 36 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்