சீனாவில் பண மோசடியில் ஈடுபட்ட 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
மியான்மரில்(Myanmar) மோசடி மையங்களை நடத்திய 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின்(China) கிழக்கு ஜெஜியாங்(Zhejiang) மாகாணத்தில் உள்ள வென்சோவில்(Wenzhou) உள்ள ஒரு நீதிமன்றத்தால் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வடக்கு மியான்மரின் நான்கு குடும்பங்களை உள்ளடக்கிய மிங்(Ming) குடும்பம், இணைய மோசடி, விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் உற்பத்திகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்நிலையில், தூக்கிலிடப்பட்டவர்களின் குற்றங்களில் வேண்டுமென்றே கொலை செய்தல், வேண்டுமென்றே காயப்படுத்துதல், சட்டவிரோத தடுப்புக்காவல், மோசடி மற்றும் கேசினோ மையம் ஆகியவை அடங்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், தூக்கிலிடப்பட்ட 11 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை பெய்ஜிங்கில்(Beijing) உள்ள உச்ச மக்கள் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது, இது 2015 முதல் செய்யப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் போதுமானவை என்று கண்டறிந்துள்ளது.





