உலகம் செய்தி

சீனா, கனடா வர்த்தக உறவில் புதிய திருப்பம் – குறைந்த வரி ஒப்பந்தம்

சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் கனேடிய பிரதமர் மார்க் கார்னியும் பெய்ஜிங்கில் நடைபெற்ற முக்கிய சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் குறைந்த வரி விகிதங்களை அறிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, மார்ச் முதலாம் திகதிக்குள் சீனா கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கனோலா (canola) எண்ணெய் மீதான வரியை 85% இலிருந்து 15% ஆகக் குறைக்கும்.

இதேவேளை, கனடா சீன மின்சார வாகனங்களுக்கு ‘மிகவும் சாதகமான நாடு’ விகிதமான 6.1% வரியை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் கார்னி தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக நிலவிய பதற்றம் மற்றும் இருதரப்பு வரிகளுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இந்த முன்னேற்றத்தை சி ஜின்பிங் பாராட்டியதுடன், சீனாவுக்கு சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு வருகை தந்த முதல் கனேடியத் தலைவர் என்ற வகையில் இது கார்னிக்குமான அரசியல் வெற்றியாகவும் கருதப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகள் காரணமாக ஏற்பட்ட வர்த்தக நிச்சயமற்ற சூழலைத் தொடர்ந்து, கனடா தனது வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்த முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சீனாவுடன் இந்த நெருக்கம் உருவாகியுள்ளது.

சீனாவுடனான உறவுகள் சமீப காலங்களில் “கணிக்கக்கூடியதாகவும், மரியாதைமிக்கதாகவும்” இருந்ததாக கார்னி கூறினார்.

இதேவேளை, மனித உரிமைகள், தேர்தல் தலையீடு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் கனடாவின் “சிவப்பு கோடுகள்” தெளிவாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பயணம், அமெரிக்க வரி விதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையக்கூடும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், சீனா தன்னை ஒரு நிலையான மற்றும் நடைமுறை உலக நண்பராக முன்வைக்க முயற்சித்து வருகிறது.

அண்மைய வாரங்களில் தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஐரிஷ் பிரதமர் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிரித்தானியா மற்றும் ஜெர்மன் தலைவர்களும் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; இன்றைய முடிவுகள் எதிர்கால தசாப்தங்களை வடிவமைக்கும்,” என கார்னி கூறினார்.

சந்திப்பின் போது, சீனா–கனடா உறவுகள் உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உதவும் என சி ஜின்பிங் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!