இலங்கை

கிளிநொச்சியில் பாம்பு கடிக்கு இலக்காகி குழந்தை மரணம்

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரமந்தனாறு பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.குறித்த குழந்தை உடனடியாக தருமபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையினரால் குழந்தையை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து உறவினர்கள் அந்த பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு, பொரள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த பொழுது அன்றைய தினமே மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்