இலங்கை

இலங்கையில் மக்களுக்கு கிடைத்த இலவச அரிசியால் உயிரிழந்த கோழிகள்

அரசாங்கம் வழங்கிய அரியை சாப்பிட்ட 07 கோழிகள் உயிரிழந்துள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தினால் இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ரம்பதகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ரிதிகம, பனகமுவைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியில் சில கோழிகளுக்கு உணவாக வழங்கப்பட்டது.

அரிசியை உண்ட 07 கோழிகள் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்ததை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!