ஆசியா

பருத்திப் பஞ்சைப் பனி என ஏமாற்றிய சீனா – கோபமடைந்த சுற்றுலா பயணிகள்

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் செங்டூ பனி கிராமம் போலிப் பனியைப் பயன்படுத்தி சுற்றுப்பயணிகளை ஏமாற்றியதற்காக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொாடர்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கிராமம் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமானது.

பருத்திப் பஞ்சைப் பயன்படுத்தி கிராமத்தில் பனி இருப்பதைப் போன்ற தோற்றம் அமைக்கப்பட்டது. அதைப் பற்றி சுற்றுப்பயணிகள் இணையத்தில் பதிவிட்ட கருத்துகள் பரவலாகப் பகிரப்பட்டன.

சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கிராமத்தில் வானிலை சூடாக இருந்ததால் நினைத்ததைப் போல பனி படரவில்லை என்று கிராமத்தின் அதிகாரபூர்வ Wechat கணக்கில் பதிவிடப்பட்டது.

பருவநிலை மாற்றம் காரணமாகச் சீனாவில் நீண்ட நாள்களுக்கு அதிக சூடாக இருக்கிறது அல்லது இடைவிடாமல் கனத்த மழைபெய்கிறது.

கிராமத்தில் பனி இருப்பதைப் போல சுற்றுப்பயணிகளை நம்ப வைக்கப் பருத்திப் பஞ்சு பயன்படுத்தப்பட்டது. ஆனால் சுற்றுப்பயணிகள் அதைக் கண்டுபிடித்துவிட்டனர்.

சுற்றுப்பயணிகளின் கருத்துகளுக்கு ஏற்ப கிராமம் போலிப் பனியை அகற்றியது. தற்போது அந்தச் சுற்றுலாத்தலம் மூடப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்புக் கேட்ட கிராமம், அவர்களது பணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறியது.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்