இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக கெமி படேனோக் தெரிவு

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.

இதில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.

அதே சமயம், தொழிலாளர்கள் கட்சி 412 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி, 1832ம் ஆண்டுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்வி இதுவாகும்.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை தோற்கடித்து, கெமி படேனாக் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் பிரிட்டனில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக் பெற்றுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கொள்கைகள் மீது கெமி படேனாக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், கன்சர்வேடிவ் கட்சி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வரும் சூழலில், கட்சியின் நற்பெயரை மீட்டெடுத்து 2029 நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிப்பது கெமி படேனாக்கிற்கு பெரும் சவாலான பணியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி