ஐரோப்பா

ஐரோப்பியாவில் சாரதி அனுமதி பத்திரங்களில் மாற்றம் – வெளியான முக்கிய தகவல்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாகன சாரதி அனுமதி பத்திரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமானது வாகன சாரதி அனுமதி பத்திரத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக சமீப காலங்களாக தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்துடைய சில ஆலோசனை அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது புதிய உத்தேச சட்டத்தின் படி கட்டாய உடல் நல பரிசோதனை மற்றும் வாகன சாரதி அனுமதி பத்திரமானது மட்டுப்படுத்தப்பட்ட காலங்களுக்கு மட்டும் வழங்குவதற்கும்,

மேலும் டிஜிடல் முறையிலான இந்த வாகன சாரதி அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கான ஐரோப்பிய பாராளுமன்றத்துடைய சில பிரதிநிதிகள் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை வைத்து இருந்தால் அவர்கள் 5 வருடங்களுக்கு ஒரு தடவை கட்டாய உடல் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ் வாகன சாரதியாக கடமையாற்ற விரும்புகின்றவர்கள் 18 வயதில் இவ்வாறு வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் இந்த சட்டத்தில் சில உத்தேச திருத்தங்களை கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!