இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மாற்றமடைந்து வருகின்றன.
பேலியகொட மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பிற சமையல் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு விலைகளில் சிறிய உயர்வுகள் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தான் உருளைக்கிழங்கு தற்போது ஒரு கிலோகிராம் 165 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் உருளைக்கிழங்கு 210 ரூபாயிலிருந்து 220 ரூபாய் வரை விற்பனையாகின்றது.
வெங்காய விலைகளிலும் மாறுபாடுகள் உள்ளன. யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 220 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
தம்புள்ளை சந்தையில் உள்ளூர் பெரிய வெங்காயம் 100 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 350 ரூபாய்க்கும், செத்தல் மிளகாய் 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், ஒரு முட்டையின் விலையை 10 ரூபாயால் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு வெள்ளை முட்டை 18 ரூபாய்க்கும், ஒரு சிவப்பு முட்டை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் இந்த விலை மாற்றங்கள் பொதுமக்களின் செலவின திட்டங்களை நேரடியாக பாதிக்கக்கூடியதாக உள்ளன.
இவ்வாறான நிலையில் நுகர்வோர் மற்றும் வணிகர்கள் விலை மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.