செய்தி

இலங்கையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அதன் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ், இந்த முடிவுகள் மூத்த நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

“உலக சந்தை எரிவாயு விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அத்தகைய வெளியீட்டிற்குப் பிறகு, ஒரு அமைப்பாக, உயர் நிர்வாகத்துடன் இணைந்து, நாங்கள் நிச்சயமாக நுகர்வோருக்கு மிகவும் மலிவு விலையை வழங்குவோம்.. ஜனவரி மாதத்தில் உலக சந்தை விலைகள் அப்படியே இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒருவேளை எதிர்வரும் சில நாட்களில் அது மாறக்கூடும்.. எனவே, பெப்ரவரி மாத எரிவாயு விலை பற்றி இப்போது சொல்வது கடினம்.” என குறிப்பிடப்படுகின்றது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!