செய்தி தமிழ்நாடு

தமிழ்­நாட்­டின் அமைச்­சர்­க­ளின் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

தமிழ்­நாட்­டின் நிதி அமைச்­சர் பழனி­வேல் தியா­க­ரா­ஜன் (பிடிஆர்) அந்தப் பத­வி­யில் இருந்து அகற்றப்­பட்டு தக­வல்­தொ­ழில்­நுட்ப அமைச்­ச­ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்­நாடு, தக­வல்­தொ­ழில்­நுட்­பத்துறை­யில் முன்னணி மாநி­ல­மாக மீண்டும் திகழ பாடு­ப­டப்­போவ­தாக டுவிட்­ட­ரில் அவர் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 2021 மே மாதம் 7ஆம் தேதி திமுக ஆட்­சிக்கு வந்­தது.

அது முதல் மூன்­றா­வது முறை­யாக நேற்று அமைச்­ச­ரவை மாற்றம் கண்டது. அதன்­படி ஐந்து அமைச்­சர்­க­ளின் துறை­கள் மாற்­றப்­பட்­டன.

அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் வகித்து வந்த தக­வல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜ­னி­டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய நிதி அமைச்­ச­ராக தங்­கம் தென்­ன­ரசு பொறுப்பு ஏற்­கிறார். இவர்,மனிதவள மேலாண்­மைத் துறைக்­கும் பொறுப்பு வகிப்­பார்.

தங்­கம் தென்­ன­ர­சு­வி­டம் இருந்த தமிழ் வளர்ச்­சித்­துறை, செய்­தித்­துறை அமைச்­ச­ராக இருந்த அமைச்­சர் சாமி­நாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்­ச­ராக பொறுப்பு ஏற்­றுக்­கொண்ட டி.ஆர்.பி.ராஜாவிற்கு  தொழில்­துறை ஒதுக்­கப்­பட்டு இருக்­கிறது. இந்­தத் துறையை இதுவரை  தங்­கம் தென்­ன­ரசு கவ­னித்து வந்­தார்.

இத்­த­கைய சூழ­லில் அமைச்­ச­ரவை மாற்­றப்­பட்டு புதிய நிதி அமைச்­சர் நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி