இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததன் பின்னர், தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,461 ஆக பதிவாகியுள்ளது.
உலக தங்க விலையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி, இன்று காலை கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் “22 காரட்” பவுண் ஒன்றின் விலை 337,600 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி 327,500 ரூபாயாக காணப்பட்டது.
இதற்கிடையில், ஜனவரி 1 ஆம் திகதி 354,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று 365,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





