இலங்கை செய்தி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் மாற்றம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தலைமையில் நேற்று (18) கூடிய சுமார் ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சட்டத்தரணிகள் சங்கத்தின், கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து கௌசல்ய நவரத்னவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கௌசல்ய நவரத்னவை சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக வேறொரு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை தலைமை பதவிக்கு நியமித்து, சட்டத்தரணிகள் சங்கத்தின் கடந்தகால கணக்கு அறிக்கைகளை அங்கீகரிக்காமல் நிராகரிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இது சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் கறுப்பு நாளாக குறிப்பிடப்படும் என நேற்றைய கூட்டத்தில் தலைமை தாங்கிய சிரேஷ்ட சட்டத்தரணி அக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் விசாரணைக்கு JICA வழங்கிய நிதியை அதன் தலைவர் உட்பட நால்வரின் பெயரைக் கூறி பெற்றுக்கொண்ட சம்பவம் காரணமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கணக்கு அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

இத்திட்டத்திற்காக கிட்டத்தட்ட 21 மில்லியன் ரூபா JICA நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 19 மில்லியன் ரூபா சங்கத்தின் தலைவர் உட்பட ஐவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் ஐலண்ட் பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.

See also  வீட்டுச் சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி முடிவு

கௌசல்ய நவரத்ன பண காசோலை மூலம் ஆறு மில்லியன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான விவாதங்கள் எழுந்த போது அதனை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு மானியமாக கையளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், குறித்த இந்த சம்பவத்தை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க ஐந்து மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content