காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : மக்களுக்கு அறிவுறுத்தல்!
சமீபத்திய நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாகவும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) அளவுகள் அதிகரித்து வருவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் (CEA) ஊடகப் பேச்சாளர் டாக்டர் அஜித் குணவர்தன தெரிவித்தார்.
தற்போது AQI 150 முதல் 200 வரை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், வடகிழக்கு பருவமழை தொடங்குவதோடு எல்லை தாண்டிய காற்று இயக்கமும் இந்த நிலைமைக்கு காரணம் என்று விளக்கினார்.
கடந்த பல ஆண்டுகளாக இதே காலகட்டத்தில் இந்த நிலை காணப்படுவதாகவும், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் நாட்டின் காற்றின் தரம் மற்றும் வளிமண்டல நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூடுதலாக, காற்றின் தரம் குறைவதால், காற்றின் தரத்திற்கு உணர்திறன் உள்ள நபர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும், எனவே அத்தகைய நபர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் தெரிவித்து ள்ளார்.




