இந்தியா

சந்திரயான் 3 தொடர்பில் இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!

நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: 2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றது.

சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை(ஜூலை 18) மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

சந்திரயான் – 3 விண்கலம் தற்போது 41 ஆயிரத்து 603 கிலோ மீட்டருக்கு 226 கிலோ மீட்டர் தூரமுள்ள சுற்றுவட்டப் பாதையில் உள்ளது. தற்போது சந்திரயான் – 3 விண்கலம் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் – 3 விண்கலத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!