அறிந்திருக்க வேண்டியவை

2030ஆம் ஆண்டில் மனிதர்கள் நிலவில் வாழ வாய்ப்பு?

2030ஆம் ஆண்டில் மனிதர்கள் நிலவில் வாழ வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்தது.

இது குறித்து, விண்வெளிக்கு ஆட்களை அனுப்புவதற்கான சீன விண்வெளிய ஆய்வு மையப் பிரிவான சிஎம்எஸ்ஏ-வின் இணை இயக்குநர் லின் ஷிகியாங் கூறியதாவது:

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரா்களை அனுப்பி அங்கு சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமின்றி, வேற்று கிரத்துக்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் தொழில்நுட்பம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடையும்.

நிலவு உருவானது எவ்வாறு, அதில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவை குறித்து கூடுதல் விவரங்களை இந்த திட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நிலவுக்கும், பூமிக்கும் இடையே சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்துவது, நிலவில் இருப்பிடங்களை அமைத்து மனிதா்கள் தற்காலிகமாகத் தங்குவது, இயந்திர மனிதர்களுடன் மனிதா்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு 2030-ல் நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் திட்டம் அடித்தளம் அமைக்கும் என்றாா் லின் ஷிகியாங்.

ஏற்கெனவே, நிலவுக்கு ஆளில்லாத விண்கலங்களை சீனா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. நிலவில் நகா்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஓா் ஆய்வுக் கலத்தையும் சீனா வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, நிலவில் சா்வதேச ஆய்வு நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த 2021-ஆம் ஆண்டில் ரஷியாவும், சீனாவும் கூட்டாக அறிவித்தன.

நிலவின் பரப்பிலோ அல்லது அதனை சுற்றி வரும் வகையிலோ அந்த சா்வதேச நிலவு ஆய்வு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

நிலவுக்கு முதல்முறையாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1968-இல் விண்வெளி வீரா்களை அனுப்பியது. பின்னா் அப்பல்லோ-11 விண்கலத்தில் அனுப்பப்பட்ட நீல் ஆா்ம்ஸ்ட்ராங்கும் புஸ் ஆல்ட்ரினும் கடந்த 1969-இல் முதல்முறையாக நிலவில் தரையிங்கினா்.

அதன் பிறகு அமெரிக்கா 6 முறை நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பியது.

எனினும், 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதை நிறுத்திய அமெரிக்கா, வரும் 2025-ஆம் ஆண்டில் மீண்டும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், சீனாவும் அதுபோன்ற திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. சீனாவின் அந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய உலகின் 2-ஆவது நாடு என்ற பெருமையை அந்த நாடு பெறும்.

 

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.
Skip to content