செய்தி விளையாட்டு

Champions Trophy – நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்

9வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் மார்ச் 9ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி வருகின்றனர்.

அந்த வகையில் நாளை சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகி உள்ளார்.

இந்நிலையில் பெர்குசனுக்கு பதிலாக கைல் ஜேமிசன் அணியில் இடம் பிடித்துள்ளார். ஜேமிசன் கடைசியாக ஒருநாள் போட்டியில் 2023ம் ஆண்டு செப்டம்பரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 34 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி