மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான 21 உலக ‘A’ தர மத்திய வங்கி ஆளுநர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார்.
நியூயோர்க்கை தளமாகக் கொண்ட “குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை” வருடாந்தம் நடத்திய கணக்கெடுப்பின்படி, அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1994 ஆம் ஆண்டு முதல், “குளோபல் ஃபைனான்ஸ் இதழ்”, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக மத்திய வங்கி ஆளுநர்களை வரிசைப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு தரவரிசையின்படி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கவர்னர் ஸ்ரீகாந்த தாஸ் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)