இலங்கை செய்தி

2,200 ஊழியர்கள் தவிப்பு: ஜனாதிபதியின் தலையீட்டை கோரி அவசர கடிதம்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரியுள்ளனர்.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறத் தீர்மானித்து, அதற்கேற்பத் தமது வருங்காலத் திட்டங்களை வகுத்திருந்த போதிலும், மறுசீரமைப்பு செயல்முறை நாளுக்கு நாள் தாமதமாவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சபை கலைக்கப்படும் உத்தியோகபூர்வ திகதி இன்னும் அறிவிக்கப்படாததால், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய சுயதொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியாமல் தாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மறுசீரமைப்புப் பணிகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில், பிப்ரவரி 1-ஆம் திகதியை உத்தியோகபூர்வ ஓய்வுத் திகதியாக அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!