இந்தியா உலகம்

‘போர் நிறுத்த முயற்சி’ – பிரதமர் மோடி களத்தில்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பதற்குரிய முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது.

இதற்கமைய அமைதி முயற்சி குறித்து பிரான்ஸ், மலேசியா, ஓமான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தியுள்ளார்.

முதலில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
“ மத்திய கிழக்கு நிலவரம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியுடன் கலந்து பேசினேன். அங்கு பதற்றத்தை தணிக்க வேண்டும்.

போரை நிறுத்த அமைதிப் பேச்சு , இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அங்கு அமைதியை ஏற்படுத்த நானும், பிரான்ஸ் ஜனாதிபதியும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

ஓமான் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனும் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வலைதளப் பதிவில், ‘ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

ஓமானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக சகோதரர் ஹைதம் பின் தாரிக்குக்கு நன்றி தெரிவித்தேன்.

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியாவுடன் ஓமனும் உறுதுணையாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் மோடியின் சமரச முயற்சி அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுடன் இந்தியா நல்லுறவை பேணி வருகிறது.

இதன்படி இரு தரப்பிலும் பிரதமர் மோடியால் மட்டுமே இராஜதந்திர பேச்சு நடத்த முடியும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!