இந்தியா

செந்தில் பாலாஜி மீதான வழக்கு: 1500 பேரிடம் தீவிர விசாரணை!

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சாரதி மற்றும் நடத்துனர்களிடம் பணிக்கு பணம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பினால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்

இது தொடர்பாக  தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் விரைவுப்படுத்தி உள்ளனர்.

2014 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் பணியமர்த்தப்பட்ட சுமார் 1,500 பேரிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  150 பேரிடம்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எப்படி பணியமர்த்தப்பட்டது? சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் என்ன? மத்திய குற்றப்பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர்

(Visited 9 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content