டெல்லியில் திடீரென வெடித்து சிதறிய கார் – 08 பேர் பலி!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று திடீரென வெடித்து சிதறியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த தீயானது அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் டெல்லி காவல் சிறப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




