இந்தியா

டெல்லியில் திடீரென வெடித்து சிதறிய கார் – 08 பேர் பலி!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில்  உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று  திடீரென வெடித்து சிதறியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தீயானது அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க  பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் டெல்லி காவல் சிறப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!