இலங்கை

திருகோணமலை கன்னியா பகுதியில் வாகன விபத்து- மூவருக்கு காயம்!

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரச பஸ் கல் குவாரிக்கு அருகில் சுற்றுலா வந்த பஸ் ஒன்று திருப்ப முயற்சித்த போது விபத்துக்குள்ளானதாகவும் இதனால் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்து இன்று (01) 11. 30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.

கன்னியாவிற்கு சுற்றுலா சென்ற தனியார் பஸ் குறித்த இடத்தை தவறியமையினால் கல்குவாரிக்கு அருகில் திருப்ப முற்பட்டபோது வேகமாக வந்த அரச பஸ் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!