ஆண்ட்ரூ அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் – கனேடிய பிரதமர் அழைப்பு
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான உறவுகள் குறித்த அழுத்தங்களுக்கு மத்தியில், ஒக்டோபரில் அவரது பட்டங்கள் பறிக்கப்பட்ட போதிலும், முன்னாள் இளவரசர் அரியணையில் எட்டாவது இடத்தில் உள்ளார்.
எப்ஸ்டீனுடன் இரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பின்னர், ஆண்ட்ரூ கடந்த மாதம் பொது அலுவலகத்தில் தவறான நடத்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்தார்.
அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என தொடர்ந்தும் கடுமையாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய கார்னி, முன்னாள் யார்க் டியூக்கின் வருந்தத்தக்க நடவடிக்கைகள்
அவரை வாரிசு குடும்பத்திலிருந்து நீக்க வழிவகுக்கும் என்று தான் நினைத்ததாகக் கூறினார்.





