மத்திய கிழக்கு

இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கனடா குற்றச்சாட்டு

காஸா மக்களுக்கு வான்வழியாக உதவிப் பொருள்களைக் கனடா வழங்கியுள்ளது. அதுகுறித்த தகவலைக் கனடிய அரசாங்கம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) வெளியிட்டது.

கிட்டத்தட்ட 22 மாதங்களாகக் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அனைத்துலக விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கனடா தெரிவித்தது.

காஸாவிவுக்கு முதன்முறையாக ஏறத்தாழ 10 டன் உதவிப் பொருள்களை வான்வழியாகக் கனடா வழங்கியது. கனடாவின் ஆயுதப்படை அதனை மேற்கொண்டது.

கனடாவையும் சேர்த்து ஜோர்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், எகிப்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் உதவிப்பொருள்களை வழங்கின.

கடந்த வாரம் கனடா, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பாகத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தது.

கடந்த சில மாதங்களாகக் காஸாவுக்கு உதவிப்பொருள்களை அனுப்புவதை இஸ்ரேல் கடுமையாகத் தடுத்து வருகிறது. இதனால் காஸா மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

காஸா மக்களுக்குத் தேவையான உதவிப்பொருள்களை வழங்கவிடாமல் தடுப்பது அனைத்துலக விதிமுறைகளை மீறும் நடவடிக்கை என்று கனடா தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
Skip to content