இலங்கை

இலங்கை – ஊழல் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்தச் சட்டத்தின்படி, விசாரணைகள், வழக்குகள், நிர்வாக மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிடத்தக்க சட்ட விளக்கம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதன்படி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தம் செய்து சில புதிய பிரிவுகளை உள்ளடக்குவதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.

இதன்படி, திருத்தப்பட வேண்டிய சரத்துக்கள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய சரத்துக்கள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.

 

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!