இலங்கை

இலங்கை – மலேசியா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான (FTA) பொருத்தமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளப் பெறுவதற்கு ஏற்றுமதி சார்ந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்றுமதியின் பல்வகைப்படுத்தல் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துவது முக்கியம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மலேசியா போன்ற வலுவான மற்றும் மூலோபாய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை இலங்கை அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.

இலங்கையின் 34வது ஏற்றுமதி இடமான மலேசியா, ASEAN மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கிய அங்கத்துவ நாடாகும். 2023 ஆம் ஆண்டில், மலேசியாவுக்கான ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 58.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எட்டுவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!