இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் படுகாயம்

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியா-கண்டி வீதியில் டோப்பாஸ் பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் பேருந்தில் ஓட்டுநர் உட்பட 54 பேர் பயணம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 3 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேருந்தில் பயணித்த குழுவின் குருநாகலிலிருந்து பதுளைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

அவர்கள் குருநாகல் கிரிவவுல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 24 times, 24 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்