இலங்கை

கொழும்பில் பஸ்,கார், லொறி ஆகிய வாகனங்கள் மோதி விபத்து!

கொழும்பு பிரதான வீதியில் மாவனெல்ல பெலிகம்மன பிரதேசத்தில் வாகனத் தொடரணி ஒன்றுடன் ஒன்று மோதியதில் இன்று (23.08) பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பிரதான வீதியில் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ், கார், லொறி மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது முன்னால் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டி வீதியில் நிறுத்தப்பட்டதையடுத்து பின்னால் வந்த வாகனங்கள் திடீரென பிரேக் போட்டு வாகனங்களை நிறுத்தியுள்ளன.

இதனால் பின்னால் வந்த பேரூந்து கார் மீது மோதியதுடன், முன்னால் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் லொறியுடனும் கார் மோதியுள்ளது.

கார் மோதியதில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வாய்க்காலில் தள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுவாமிநாமாவுக்கு  லேசான காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!