இலங்கை

இலங்கையில் விபத்திற்குள்ளான பேருந்து – 12 பேர் வைத்தியசாலையில்!

இலங்கை – ரந்தெனிகலவில் இன்று (29) மாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது. இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரந்தெனிகலவில் 36வது மற்றும் 37வது மைல்கற்களுக்கு இடையில் ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.

திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில்  கந்தெகெட்டிய மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!