ராஜஸ்தானில் பனிமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளான பஸ் – ஆபத்தான நிலையில் 10 பேர்

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 45 பயணிகளுடன் சென்ற பேருந்து லாரி மீது மோதியதில் 30 பேர் காயமடைந்தனர் மற்றும் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் உஜ்ஜயினியில் இருந்து டெல்லிக்கு ஸ்லீப்பர் பஸ் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
காலையில் அடர்ந்த பனிமூட்டம் விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
(Visited 24 times, 1 visits today)