ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – நால்வர் மரணம்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சீரமைக்கப்பட்டு வந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டிடத்தை நிர்வகித்து வந்த 30 வயதுடைய ஸ்பானிஷ் பெண் மற்றும் மாலி, கினியா, ஈக்வடாரைச் சேர்ந்த 30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று தொழிலார்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் அலுவலகக் கட்டிடம் ஒரு ஹோட்டலாக மாற்ற வேலைகள் நடந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது
ஸ்பெயினில், பெரும்பாலும் பழைய கட்டிடங்களின் உட்புறம் மட்டுமே முழுமையாக புதுப்பிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் முகப்புகள் அவற்றின் அசல் வடிவத்தில் பராமரிக்கப்படுகின்றன.
(Visited 2 times, 1 visits today)