இலங்கை

திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் முயற்சி – பொலிஸாரை தாக்கிய பிக்கு

திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் முயற்சி கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு முறியடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர கடற்கரைக்கு அருகில் விகாரை அமைக்கும் நோக்குடன், பிக்கு தலைமையிலான குழுவினால் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பிரச்சினை தீவிரமடைந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தபால விஜயபாலவுக்கு உடனடியாகத் தெரிவித்தார்.

இதனையடுத்துத் தலையிட்ட அரசாங்கம், பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலையை அகற்ற நடவடிக்கை எடுத்தது.

இதன்போது, பிக்கு தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை மேலும் பிரச்சினையைத் தீவிரப்படுத்தியது.

எனினும், இரவு வேளையில் கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://x.com/ShanakiyanR/status/1990101446755512358?s=20

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!