ஐரோப்பா

பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பெண்: குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி

தந்தையின் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் திடீரென்று மாயமான பிரித்தானிய பெண்மணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது அவரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த மே 19ம் திகதி தமது தந்தையின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்ட 48 வயதான எமிலி சாண்டர்சன் திடீரென்று மாயமானார். 11 நாட்களுக்கு பின்னர் தெற்கு யார்க்ஷயர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் 8ம் திகதி மார்க் நிக்கோல்ஸ் என்ற 43 வயது நபர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கான தீர்ப்பு அக்டோபர் 6ம் திகதி வெளியாகும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையின் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் எமிலியை காணவில்லை என அவரின் குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். அத்துடன் பொதுமக்களிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே மே 30ம் திகதி 3 படுக்கையறை கொண்ட பாழடைந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து எமிலியின் சடலம் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வில், தலையில் ஏற்பட்ட ஆழமான காயங்களால் அவர் மரணமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content