இந்தியாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை பலி!
இந்தியாவில் மலையேற்றத்தின்போது பிரித்தானிய பிரஜை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹோவர்ட் தாமஸ் ஹாரி (27) என அழைக்கப்படும் குறித்த நபர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தௌலதார் மலைகளில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
2,800 மீட்டர் உயரமுள்ள ஒரு சிறிய நகரமான ட்ரையுண்டிலிருந்து இறங்கும்போது அந்த நபர் வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட நிலையிலும் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குளிர்காலத்தில் அதிக உயரத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்ட போதிலும், ஆண்கள் மலையேற்றம் மேற்கொண்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





