வங்கதேசத்தில் இந்துக்களுக்கு நிகழும் பேரழிவு – பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கவலை
வங்கதேசத்தில்(Bangladesh) ஒரு பேரழிவு தரும் சூழ்நிலை குறித்து பிரித்தானிய(British) பாராளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன்(Bob Blackman) கவலை தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது வன்முறை அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெருக்களில் கொலை செய்யப்படுவதாகவும் அவர்களின் வீடுகள் மற்றும் கோயில்கள் தீக்கிரையாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்..
பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசிய பாப் பிளாக்மேன், பிப்ரவரி 12ம் திகதி வங்கதேசத்தில் நடைபெறும் தேசியத் தேர்தல்கள் ஜனநாயகக் கவலைகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது மிகவும் கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வங்காளதேசம் முழுவதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்யவும் இங்கிலாந்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை விளக்கும் ஒரு அறிக்கையை பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளரிடமிருந்து பாப் பிளாக்மேன் கோரியுள்ளார்.




