இந்தியா

விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ்

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்தவகையில், மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மன்னரும் ராணியும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அப்போதே இந்திய பிரதமர் மோடியும் மன்னர் மற்றும் ராணிக்கு இந்தியாவில் விருந்தளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மன்னர் சார்லஸ் – ராணி கமிலா ஆகியோர் அரசு முறை பயணமாக விரைவில் மீண்டும் இந்தியா வருவதாக அந்த நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இங்கிலாந்து அரச தம்பதியின் இந்த பயணத்தின்போது, அவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கும் செல்வதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

(Visited 37 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே