ஐரோப்பா செய்தி

உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு: பிரித்தானிய தூதரை வெளியேற்றியது ரஷ்யா

பிரித்தானியத் தூதரக அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாகக் கூறி, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாஸ்கோவிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் காரெத் சாமுவேல் டேவிஸ் (Gareth Samuel Davies) என்பவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவர் ரகசியமாக உளவு வேலைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி (FSB) அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் இரண்டு வாரங்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை, இது ஒரு “அடிப்படையற்ற மற்றும் உள்நோக்கம் கொண்ட செயல்” என்று சாடியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுப்பது குறித்து லண்டன் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!