இலங்கை

அப்பாவி இலங்கையர் மீது தாக்குதல்: பிரித்தானிய காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நிரபராதியை குற்றவாளி என்று தவறாகக் கருதி அவரைத் தாக்கி கைது செய்த லண்டன் பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு அவருக்கு 12 வார பணி இடைநீக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்களும் மார்ஷுக்கு 150 மணிநேர ஊதியம் இல்லாத வேலை மற்றும் அவர் இழப்பீடாக £1,500 செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

2022 இல் கிழக்கு லண்டனில் உள்ள ரோம்ஃபோர்டில் ஒரு நபர் மிரட்டல் விடுத்து ஒரு கடையை சேதப்படுத்தியதாக அவர் முறையிட்டுள்ளார்.

எனினும் குற்றவாளியை கைது செய்யாத ஜொனாதன் மார்ஸ் என்ற பொலிஸ் அதிகாரி 999 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்த ரசிகே அத்தநாயக்கவை தாக்கி கைது செய்துள்ளார்.

அத்துடன் அவர் அத்தநாயக்கவை தரையில் இழுத்து சென்று தலையின் பின்புறத்தில் தாக்கியதும் காணொளி ஒன்றில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content