ஆஸ்திரேலியா செய்தி

பிரித்தானியா செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டைப் பிரித்தானியா அல்லது ஐரிஷ் குடியுரிமை கொண்டவர்கள், இனி அவுஸ்திரேலிய கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது என புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த விதிகளின்படி, பயணிகள் செல்லுபடியாகும் பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டை வைத்திருக்க வேண்டும். அல்லது, அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் ‘உரிமைச் சான்றிதழ்’ (Right of Abode) பெற்று இணைத்திருப்பது அவசியமாகும்.

புதிய மின்னணு பயண அங்கீகார முறை காரணமாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முறையான ஆவணங்கள் இன்றி விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், பயணிகள் முன்கூட்டியே தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!