ஐரோப்பா

சீனாவின் ஊழியர்களை உளவாளிகளாக மாற்றிய பிரித்தானியா!

சீன மத்திய அரசின் இரு ஊழியர்களை உளவாளிகளாக மாற்றியதாக பிரித்தானியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாநில பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இரண்டு உளவாளிகளான திருமணமான தம்பதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சீன அமைச்சகம் தனது அறிக்கையில், வாங் என்ற குடும்பப்பெயரைக் கொண்ட நபர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவில் படிதத்ததாகவும், அக்காலப்பகுதியில் MI6 இரகசியமாக ஏற்பாடு செய்த இரவு உணவுகள் மற்றும் சுற்றுப்பயணங்களுக்கு அவர் அழைக்கப்பட்டதாகவும் கூறியது.

பணத்தின் மீது வலுவான ஆசைக் கொண்ட குறித்த நபர், உளவுப் பயிற்சிக்குப் பிறகு, MI6 அதன் அரசாங்கம் தொடர்பான முக்கியமான தகவல்களைச் சேகரிக்க சீனாவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முக்கிய அரசாங்கப் பிரிவில்” பணிபுரிந்த தனது மனைவியை இரட்டிப்புப் பணத்திற்கு மாற்றுமாறு MI6 வாங்கை வற்புறுத்தியதாகவும் அமைச்சகம் கூறியது.

ஜோ என்ற குடும்பப்பெயர் கொண்ட மனைவி இறுதியில் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் உளவாளிகளாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content