ஐரோப்பா செய்தி

ரஷ்யா தொடர்பு சந்தேகம் – ஆர்மீனியா ஏற்றுமதி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் பிரித்தானியா

ரஷ்ய இராணுவ விநியோகச் சங்கிலியுடன் தொடர்புகள் இருப்பதாக The Guardian தகவல் வெளியிட்ட நிலையில்
ஆர்மீனியாவிற்கு உயர் தொழில்நுட்ப உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கிய முடிவை பிரித்தானிய அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

செஷயரை (Cheshire) தளமாகக் கொண்ட சிக்னெட் டெக்ஸ்கிம்ப் (Cygnet Texkimp) நிறுவனம், கார்பன் ஃபைபர் “ப்ரெப்ரெக்” (carbon fibre prepreg) தயாரிக்க பயன்படும் இரண்டு இயந்திரங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது. இந்த இலகுரக பொருள் சிவில் மற்றும் இராணுவ பயன்பாடுகளில் பயன்படுத்தப்படக்கூடியதாகும்.

கடந்த ஆண்டு, ஏற்றுமதிக்கு சிறப்பு உரிமம் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், வர்த்தக அமைச்சர் Chris Bryant (கிரிஸ் பிரையன்ட்) இந்த இயந்திரங்கள் இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்ற கவலைகள் காரணமாக ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.

கார்பன் ஃபைபர் பொருட்கள் உக்ரைன் (Ukraine) போரில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் (missiles) மற்றும் ட்ரோன்கள் (drones) தயாரிப்பில் முக்கிய பங்காற்றக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து லியாம் பைர்ன்(Liam Byrne), ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (House of Commons) வணிகக் குழுவின் தலைவர், அமைச்சருக்கு கடிதம் எழுதி கவலை வெளியிட்டிருந்தார்.

அறிக்கையின்படி, ஆர்மீனிய நிறுவனமான ரைடெனா எல்எல்சி (Rydena LLC), கிரெம்ளினுடன் தொடர்புடைய Umatex (உமேடெக்ஸ்) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஷய் ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தலைமையிலான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த நிறுவனம் முக்கிய விநியோகஸ்தாராா வளர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ரைடெனா நிறுவனம் ரஷ்யா (Russia) அல்லது தடைகள் விதிக்கப்பட்ட நிறுவனங்களுடன் எந்தவித வணிகத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.

சிக்னெட் டெக்ஸ்கிம்ப் நிறுவனமும், இந்த உபகரணங்கள் முழுமையாக சிவில் பயன்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தற்போது பிரிட்டன் அரசின் விரிவான மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!