இலங்கை

உக்ரைனுக்கு 20 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் பிரித்தானியா!

உக்ரைனில் மின் கட்டமைப்பை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் 20 மில்லியன் பவுண்டுகளை வழங்க பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் “100 ஆண்டு கூட்டாண்மை”யின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 பாடசாலைகளை உருவாக்கவும் உறுதிபூண்டுள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva) கியேவில் உள்ள உயர் உக்ரைனிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளதுடன், ரஷ்யாவின் தாக்குதல்களினால் சேதமடைந்த மின் கட்டமைப்பையும் பார்வையிட்டுள்ளார்.

மேலும் முக்கிய நகரமான குபியன்ஸ்கை (Kupiansk) மீண்டும் பெறுவதற்கான போரில் உயிரிழந்த ஒவ்வொரு உக்ரேனிய சிப்பாய்க்கும் பிரதியீடாக குறைந்தது 27 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சமீபத்திய உளவுத்துறை மதிப்பீடுகளில் இந்த தரவுகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!