ரஷ்யாவில் இடிந்து விழுந்த பாலம் : 07 பேர் பலி, 69 பேர் படுகாயம்!

ரஷ்யா முழுவதும் தனித்தனி சம்பவங்களில் பாலங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரையன்ஸ்க் பகுதியில் ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர். மற்றும் 69 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதேநேரம் இது குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் புலனாய்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை இரண்டு பாலங்களும் வெடிப்புகள் காரணமாக இடிந்து விழுந்ததாகக் கூறியது.
(Visited 3 times, 1 visits today)