இலங்கை செய்தி

யாழில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான சிறுவன் – நீதி கோரி போராட்டம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு அருகில் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்ட நிலையி இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடியாது என பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து , அவர்களை வெளியேற்றியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து போராட்ட காரர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 10 ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வாகனத்தை செலுத்திய 17 வயதான வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மீது குறைந்தபட்ச விசாரணைகள் கூட முன்னெடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேவேளை சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!