செய்தி

லண்டனில் அதிர்ச்சி – சிறுமியை கத்தியால் குத்திய சிறுவன்

லண்டனில் சிறுமி ஒருவரை சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kent என்ற இடத்தின் Sittingbourne பகுதியில் 15 வயதுடைய சிறுமியை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

வெள்ளிக்கிழமை, மாலை 3.55 மணியளவில், Adelaide Drive என்ற இடத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் குணமடைந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை தொடரும் நிலையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அளிக்கும்படி கென்ட் பொலிஸார் சாட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, கத்திக்குத்து நடந்த சமயத்தில் அடிலெய்ட் டிரைவ் பகுதியில் இருந்து கிடைத்த CCTV அல்லது டேஷ் கேம் காட்சிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!