போஸ்னியா செர்பிய தலைவருக்கு 1 வருட சிறை தண்டனை

சர்வதேச அமைதித் தூதரின் உத்தரவுகளை மீறியதற்காக போஸ்னிய செர்பிய பிரிவினைவாதத் தலைவர் மிலோராட் டோடிக்கிற்கு போஸ்னியா நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
போஸ்னியாவின் தன்னாட்சி பெற்ற செர்பியக் குடியரசின் தலைவரான டோடிக், அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் சர்வதேச அமைதித் தூதர் கிறிஸ்டியன் ஷ்மிட் ஆகியோரால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை இடைநிறுத்தச் செய்யும் சட்டங்களில் கையெழுத்திட்டதற்காக 2023 இல் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அரசியல் நோக்கம் கொண்டதாக டோடிக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். குற்றவியல் சட்டத்தின் கீழ், ஒரு வருடத்திற்கு மேல் தண்டனை விதிக்கப்படாவிட்டால் போஸ்னியர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்வதற்குப் பதிலாக அபராதம் செலுத்தலாம்.
(Visited 10 times, 1 visits today)