ஐரோப்பா

பின்லாந்தில் 84 ஆண்டுகளுக்குப் பின் நூலத்திற்கு திரும்ப கிடைத்த புத்தகம் – ஆச்சரியத்தில் அதிகாரிகள்

பின்லாந்தில் 1939ஆம் ஆண்டு திரும்பக் கொடுக்கப்பட வேண்டிய புத்தகம் ஒன்று 84 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதமே திரும்ப கிடைத்ததாக நூலகம் தெரிவித்துள்ளது.

பின்லந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட Refugees எனும் ஆங்கில நூல் திரும்பக் கிடைத்துள்ளதாக (Helsinki) நகரின் Oodi எனும் நூலகம் தெரிவித்துள்ளத.

ஆர்தர் கோனன் டோயில் (Arthur Conan Doyle) அந்த நூலை 1893இல் எழுதினார். அது 1939ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியே திரும்ப கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த ஆண்டு நவம்பர் பின்லாந்து மீது சோவியத் யூனியன் (Soviet Union) படையெடுத்ததால் நாடு முழுதும் சலசலப்பு ஏற்பட்டிருக்கலாம். புத்தகத்தை இரவல் வாங்கியவர் அதைத் திரும்பக் கொடுக்கமுடியாமல் போயிருக்கலாம் என்று நூலகம் நம்புகிறது.

பின்லந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே போர் சுமார் 4 மாதங்கள் நீடித்தது. புத்தகத்தை இரவல் வாங்கியவர் போரில் பிழைத்தாரா என்பது தெரியவில்லை.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்