ஐரோப்பா

வெடிகுண்டு மிரட்டல் – இத்தாலியில் அவசரமாகத் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலிருந்து புது டில்லிக்குச் சென்றுகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் இத்தாலியின் ரோம் நகரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

வெடிகுண்டு அச்சுறுத்தலால் இவ்வாறு விமானம் ரோம் நகரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

199 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்துக்குப் பாதுகாப்பாக அதற்கு முன்னர் இத்தாலிய ஆகாயப்படையின் இரு விமானங்கள் சென்றுள்ளது.

விமானம் சோதனை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது. ஆனால் வெடிகுண்டு மிரட்டல் குறித்த மேல் விவரங்களை நிறுவனம் பகிரவில்லை.

விமானம் தரையிறங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக அது ரோம் நகருக்குத் திசை திருப்பப்படுவதாய் விமானி அறிவித்தார் என பயணி ஒருவர் கூறினார்.

ரோம் சென்றடைந்ததும் பயணிகள் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பயணி சொன்னார்.

சம்பவத்தினால் ரோம் விமான நிலையத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு நேரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 43 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!